கீழ்வேளூர் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது டிராக்டர் பறிமுதல்

கீழ்வேளூர், டிச.30: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஆலங்குடி பகுதியில் கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை சோதனை செய்தபோது டிராக்டரில் அனுமதியின்றி கடுவையாற்றில் இருந்து மணல் ஏற்றி சென்றது தெரியவந்தது. மேலும் டிராக்டரில் வந்த டிரைவர் உள்ளிட்ட 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடுவையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட வடுகச்சேரியை சேர்ந்த விஜய் (24), விக்னேஷ்(26) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: