நெல்லை,டிச.30: நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கொலை மிட்டல் விடுத்த வாலிபருக்கு நெல்லை மகிளா நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. முன்னீர்பள்ளம் அருகே உள்ள மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் சொர்ணம் (45). இவருக்கும், வீரளப்பெருஞ்செல்வி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஒளிமுத்து (33) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் ஒளிமுத்து கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி சொர்ணத்தை தகாத வார்த்தையால் திட்டி அரிவாளை காட்டி ெ்காலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சொர்ணம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த முன்னீர்பள்ளம் போலீசார் ஒளிமுத்துவை கைது செய்தனர்.