ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து: கலெக்டர் அறிவிப்பு

வேலூர், டிச.30: வேலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் உணவகங்கள், தங்கும். விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதுபோன்ற இதர இடங்களில் நாளை 31ம் தேதி று இரவு பொதுவாக நடத்தப்படும். ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் அதிகம் பங்கேற்க வாய்ப்புள்ளதன் காரணமாக தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, கொரோனா நோய்த் தொற்றானது அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் சில வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா நோய்த் தொற்றானவை தற்போது மீண்டும் பரவி வருகின்ற சூழ்நிலையில் நோய் தடுப்பு பணிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் நாளை இரவு நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. இவ்வவாறு அதில் கூறியிருந்தார்.

Related Stories: