குன்றத்தூர்: மாங்காடு அடுத்த பட்டூர், பானு நகரை சேர்ந்தவர் கபீர். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கவுகார் (37). நேற்று முன்தினம் கபீர் வேலைக்கு சென்றார். மதியம், கவுகார் வீட்டில் இருந்து புகை வந்தது. இதை கண்டு அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர், அங்கு சென்று பார்த்தபோது, கவுகார் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.