திருப்பூர், டிச.30: இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் மண்டல இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) நடராஜ் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள கோயில்களுக்கு திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு, இணை ஆணையர் அலுவலகம், காட்டன் மார்க்கெட்டில் அமைக்கப்படுகிறது. இதனால், சேலம் மண்டல இணை இயக்குனர் நடராஜ், திருப்பூர் மண்டல இணை ஆணையராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள உதவி இயக்குனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.