பவானி, டிச. 30: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள ராயபாளையம், கூட்டுறவு காலனியைச் சேர்ந்தவர் ராஜா (37). இவர், சித்தோடு ராயர்பாளையம் பகுதியில் கடந்த 3 ஆண்டாக பஞ்சு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு திருப்பூர் மற்றும் பிற பகுதியில் இருந்து வாங்கி வரப்படும் கழிவு துணிகள் இங்கு மீண்டும் இயந்திரத்தில் அரைத்து பஞ்சாக மாற்றி அதில் இருந்து நூல் தயாரிக்கப்படுகிறது. இந்த நூல் வீடு துடைக்கும் துணி, கால் மிதியடி உள்ளிட்டவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இக்குடோனில் நேற்று தொழிலாளர்கள் 14 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, குடோனின் ஒரு பகுதியில் தீ பிடித்ததில் கரும்புகை கிளம்பியது. இதைக்கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது.