காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சிறுணை கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த சிறுணை கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால், பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு ) சிவ.தினகரனிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் அடுத்த சிறுணையில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களது பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில், கழிவுகள் அடைத்து கொண்டு கடந்த 1 மாதகாலமாக தண்ணீர் தேங்கியுள்ளது.