வழிப்பறி புகாரில் பிரபல ரவுடி கைது

ராசிபுரம், டிச.29: ராசிபுரம் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை போலீசார் நீண்ட நாட்களாக  தேடி வந்த நிலையில், பணம் கேட்டு மிரட்டுவதாக வந்த புகாரின்பேரில், ராசிபுரம் போலீசார் தலைமறைவாக இருந்த  கனகராஜை கைது செய்து சிறையிலடைத்தனர். ஏற்கனவே, இவர குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

Related Stories: