நாகர்கோவில், டிச.29 : புத்தாண்டு வர இருப்பதால், அசம்பாவித சம்பவங்கள், விபத்துக்களை தவிர்க்க குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர வாகன சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த இந்த வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் நாகர்கோவில் சப்-டிவிஷனில் 377, தக்கலை 489, குளச்சல் 284, கன்னியாகுமரி 175 என 1,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் மாட்டிக்கொண்டவர்கள் 485 பேர், கார்களில் சீட்பெல்ட் அணியாமல் சிக்கியவர்கள் 66 பேர் ஆவர்.