காரைக்கால் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

காரைக்கால், டிச.28: காரைக்காலில் உள்ள பிகே சாலை ,காமராஜர் சாலை, பாரதியார் சாலை உள்ளிட்ட நகரப்புற சாலைகளும் கிராமப்புற சாலைகளும் சேதமடைந்துள்ளன. புரவி புயல் காரணமாக பெய்த கனமழையால் இந்த சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டன, பல சாலைகளும் கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: