வேலூர், டிச.27: சத்துவாச்சாரியில் ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் வீட்டில் நகை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியில், 37வது தெருவை சேர்ந்தவர் ராணி(72). இவரது கணவர் கோவிந்தசாமி. ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர். ராணி கடந்த மாதம் 15ம் தேதி மகள் பிரசவத்திற்காக வீட்டை பூட்டிக்கொண்டு வள்ளிமலைக்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.