ரவுடிக்கு அரிவாள் வெட்டு

திருச்சி, டிச. 27:  திருச்சி திருவானைக்காவல் அருகே உள்ள திம்மராயசமுத்திரத்தை சேர்ந்த கிட்டப்பா மகன் மணிகண்டன் (எ) புல்லட் மணி (29). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் வசந்த் (எ) கும்பக்குடி வசந்த் (27). இருவரும் உறவினர்கள். இவர்களிடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை திம்மராயசமுத்திரம் புதுக்காலனியில் கழிவறை அருகே வசந்த் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மணி வந்தார். அப்போது 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வசந்த் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணியை வெட்டினார். இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் மணியை மீட்டு ரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: