புளியங்குடி, டிச. 26: திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், புளியங்குடியில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. மாநில வர்த்தக அணி துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன் தலைமை வகித்தார். சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ரசாக், மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூத், துணை செயலாளர்கள் மாடசாமி, பேபி ரஜப்பாத்திமா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் துரை பேசுகையில், விடியலை நோக்கி என்ற பிரசார திட்டத்தின்படி தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள 9 பேரூர், 5 ஒன்றியம், 3 நகராட்சி பகுதிகளில் சுமார் 170 இடங்களில் மக்கள் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். இதில் கடந்த 10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னைகள், கலைஞர் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும். கூட்டம் முடிந்தவுடன் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பு அச்சிட்ட பிரசுரங்களில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற வேண்டும். இதில் மகளிரணியினர் பொறுப்புகளை எடுத்து கொள்ள வேண்டும். நாளை(27ம் தேதி) நெல்லைக்கு வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திரண்டு செல்ல வேண்டும்.