தெலங்கானாவில் இருந்து நாமக்கல்லுக்கு 1,400 டன் மக்காச்சோளம் வரத்து

நாமக்கல், டிச.26: தெலங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,400 டன் மக்காச்சோளம் நேற்று நாமக்கல்லுக்கு வந்தது.  தெலங்கானா மாநிலம் காம்காம் பகுதியில் இருந்து சரக்கு ரயிலில், 1,400 டன் மக்காச்சோள மூட்டைகள் 23 வேகனில் நேற்று நாமக்கல்லுக்கு வந்தது. இவை நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு, 60 சரக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள், 21 வேகன்களில் நேற்று நாமக்கல்லுக்கு வந்தது. இங்கிருந்து 54 சரக்கு லாரிகளில் ஏற்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: