தந்தை பெரியாரின் 47 வது நினைவு தினம்

திருவள்ளூர்: தந்தை பெரியாரின் 47 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ஒன்றியம், 26 வது வேப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருநின்றவூர் நகர திராவிடர் கழக செயலாளர் கீதா, பழங்குடியினர் நல சங்க தலைவர் ஜெய தென்னரசு, இல.குப்புராசு, சிலை நிறுவனர் சதா ஜெயபால் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ராமதுரை, ரகுபதி, பன்னீர்செல்வம், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: