ஆவடி: ஆவடியை அருகே அயப்பாக்கத்தில் நள்ளிரவில் கம்பெனிக்குள் புகுந்து செல்போன்களை பறித்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர், ஐ.சி.எப் காலனி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜோசப் (53). இவர், ஆவடி அருகே அய்யப்பாக்கம்- திருவேற்காடு சாலை அபர்ணாநகர் பகுதியில் \”ஹாலோ பிளாக்\” கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் வடமாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஊழியர்கள் கம்பெனிக்குள் அறையை பூட்டி விட்டு தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, ஒரு மர்ம நபர் கம்பெனிக்குள் புகுந்துள்ளார். பின்னர், அவர் பூட்டி இருந்த அறையை தட்டி உள்ளார். சப்தம் கேட்டு இரு ஊழியர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து கதவை திறந்துள்ளனர்.