ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக பேரூராட்சி வார்டு சபை கூட்டத்தில் அண்ணாநகர், எட்டிகுளம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தினர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக சார்பில், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என 11, 12, 13 ஆகிய வார்டுகளில் திமுக வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. இதில், பேரூர் செயலாளர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். மகளிரணி சாந்தி, கவுஸ்பாஷா, துரைராணி முன்னிலை வகித்தனர். தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர்கள் சாதிக்பாஷா, சந்தோஷ் வரவேற்றனர்.