நாமக்கல், டிச.25: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், நேற்று பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார், பெரியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, நகர பொறுப்பாளர்கள் செல்வகுமார், பூபதி, ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், பாலசுப்ரமணியம், மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், மாநில மகளிர் தொண்டர் அணி இணைச்செயலாளர் ராணி, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், தலைமை செயற்குழு உறுப்பினர் பவுத்திரம் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கதிர்வேல், சிறுபான்மை அணி அமைப்பாளர் சாம் சம்பத், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை ஆனந்தன், இலக்கிய அணி அமைப்பாளர் ரங்கசாமி, தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதேபோல் முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் பெரியார் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி அமைப்பாளர் ஆனந்தன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் ரமேஷ், ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் சத்தியபாபு, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ் அண்ணாதுரை, கௌதம், மாணவர் அணி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.