எம்ஜிஆர் நினைவு தினம்

சேந்தமங்கலம், டிச.25: சேந்தமங்கலத்தில் எம்ஜிஆர் 33வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. எம்எல்ஏ சந்திரசேகரன் தலைமையில் அதிமுகவினர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் வீரப்பன், பிடிஏ தலைவர் பாஸ்கர், மாவட்ட ஐடி துணைத்தலைவர் யுவராஜ், பேரவை செயலாளர் ரவிச்சந்திரன் அவைத்தலைவர் நடராஜன் நிர்வாகிகள் வெண்ணிலா செந்தில், ஆறுமுகம், பூபதி, ஸ்டரா செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: