காரைக்குடி, டிச.25: காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் 1907 ஏக்கரில் கால்நடை பண்ணை உள்ளது. இங்கு இரண்டாம் உலகப்போரின் போது விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது. இது தற்போது வரை சேதமடையாமல் பாதுகாப்பாக உள்ளது. இங்கு உதான் திட்டத்தின் கீழ் ஏர்போர்ட் அமைக்க மதுரை ஏர்போர்ட் அதிகாரிகள் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து பாஜ தமிழ் வளர்ச்சி மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் பிரிவு மாவட்ட தலைவர் சபரி டிராவல்ஸ் கோவிந்தராஜ் கூறுகையில், ‘‘செட்டிநாடு பகுதிக்கு அதிக அளவில் வெளிநாட்டினர் வந்துசெல்கின்றனர்.