அனுமதியில்லாத சலூன் கடைகளுக்கு சீல்

ஈரோடு, டிச. 24:  ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் செயல்படும் சலூன், மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் எச்சரித்துள்ளார். ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் முடித்திருத்தகம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் சென்டர் மாநகராட்சி அனுமதியின்றி செயல்படுவதாக புகார்கள் வந்தள்ளது. அவ்வாறு அனுமதியின்றி நடத்துவோர் ஈரோடு மாநகராட்சியால் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பெற்று தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் ஈரோடு மாநகராட்சி சட்டத்தின் கீழ் உரிய தொழில் அனுமதி பெற வேண்டும். அனுமதி இன்றி செயல்பட்டால் சம்மந்தப்பட்ட சலூன், அழகு நிலையம், ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைக்கப்படும் என்பதோடு சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: