பெரம்பலூர், டிச.23: தமிழக அளவிலான பாஜக கட்சியின் மாவட்டபொருளாளர் களுக்கான பயிற்சி கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. பாஜக கட்சியின் தமிழக அளவிலான அனைத்து மாவட்டப் பொருளாளர் களுக்கான பயிற்சிக் கூட்டம் பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பாஜக மாநில பொருளாளர் சேகர் தலைமை வகித்தார். மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் முருகன் கலந்து கொண்டு சிற ப்புரையாற்றினார். இதில் பாஜக கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் ராஜா, சக்கரவர்த்தி, மாநிலச் செயலாளர் வரதராஜன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் அரும்பாவூர் ராஜேந்திரன் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த பொருளாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தல் குறித்தும் பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.