அஞ்சுகிராமம், டிச.23: அஞ்சுகிராமம் அருகே மளிகை கடை உட்பட 3 இடங்களில் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே செண்பகராமபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (36). கடந்த 3 வருடமாக வழுக்கம்பாறை மெயின் ரோட்டில் சங்கரலிங்கபுரம் சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தார். பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கடையில் இருந்து சுமார் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருந்தது . கல்லாப் பெட்டியில் இருந்த ₹3 ஆயிரமம் பணமும் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து மகேஷ் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடையின் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.