கலசபாக்கம், டிச.22: கலசபாக்கம் தொகுதியில் மக்கள் தரிசனம் மூலம் பொதுமக்களை சந்திக்க உள்ளதாக எம்எல்ஏ பன்னீர்செல்வம் கூறினார். கலசபாக்கதில் அதிமுக புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசியதாவது: கலசபாக்கம் தொகுதியில் மக்கள் தரிசனம் மூலம் பொதுமக்களை சந்தித்து இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கப்படும். மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலசபாக்கம் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபடவேண்டும்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை நிர்வாகிகள் இன்றைய தினமே தொடங்கிவிட வேண்டும். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கலசபாக்கம் தொகுதி மக்களுக்காகவும், கட்சி நிர்வாகிகளுக்கும் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளேன்.