வேலூர், டிச.22: ரேஷன் கடைகளில் உள்ள சர்வர் பழுது காரணமாக பொருட்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். தமிழகத்தில் பிஓஎஸ் இயந்திரம் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பிஓஎஸ் இயந்திரம் பொதுமக்களின் கைரேகையுடன் கூடிய பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த பயோமெட்ரிக் இயந்திரம் அடிக்கடி சர்வர் பழுது காரணமாக இயங்காமல் உள்ளதால் பொருட்கள் விற்பனை பாதிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பழைய நடைமுறையிலேயே பொருட்களை வாங்கிச்செல்ல தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. பின்னர் மீண்டும் பயோமெட்ரிக் முறையில் ைகரேகை முறையை பயன்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை கடந்த 7ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.