மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச.22: திருப்பூர் வள்ளலார் நகர் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வள்ளலார் கிளைச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டதில் ‘‘வள்ளலார் நகர், திருக்குமரன் நகர், மூகாம்பிகை நகர், அமராவதி நகர் ஆகிய பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து வேண்டும். வள்ளலார் நகர் மேற்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும், காய்கறி சந்தை அமைக்க வேண்டும். திருக்குமரன் நகர் அரசுப் பள்ளி, அமராவதி நகர் ஆகிய பகுதிகளில் குவியும் குப்பைகளை 2 நாட்களுக்கு ஒருமுறை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டனர்.

Related Stories: