பேரையூர், டிச. 22: சேடபட்டி ஒன்றியம், துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்டது துள்ளுக்குட்டிநாயக்கனூர், டி.கிருஷ்ணாபுரம், எம்.கல்லுப்பட்டி, சாணார்பட்டி கிராமங்கள். இப்பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டம் சரியாக நடக்கவில்லையென்றும், புதியதாக 100 நாள் வேலைக்கு அட்டை கேட்பவர்களுக்கு ரூ.500 லஞ்சம் கேட்பதாகவும், 100 நாள் வேலை தொடர்ந்து வழங்கப்படவில்லையென்றும் கூறப்படுகிறது.