மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் திருவலம் அருகே

திருவலம், செப்.19: காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த குகையநல்லூர் ஊராட்சி பொன்னை-திருவலம் சாலையில் எஸ்ஐ மஞ்சுநாதன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை போலீசார் தடுத்து நிறுத்தும்ேபாது, டிராக்டரை மணலுடன் அங்கேயே விட்டு தப்பியோடினர். இதனையடுத்து போலீசார் வண்டியை சோதனையிட்டதில் அனுமதியின்றி 1 யூனிட் ஆற்று மணலை அள்ளி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் தப்பியோடிய செம்பவராயநெல்லூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(24), ராணிப்பேட்டை மாவட்டம் தக்கான்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மகன் காமராஜ்(29) ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories: