ராசிபுரம், டிச.21: மத்திய அரசின் வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என பாஜவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.ராசிபுரம், ஆண்டகளூர்கேட், ஏடிசி டெப்போ, சிங்களாந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று பாஜ மாநில விவசாய பிரிவு நிர்வாகி சேகர், அப்பகுதி விவசாயிகளிடையே பேசியதாவது: விவசாயிகளின் நலனுக்காக மோடி அரசு வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. கட்சி சார்பற்ற விவசாய சங்கங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும், இந்த திட்டங்களை வரவேற்கிறார்கள்.