கரூர், டிச. 21: கரூர் மாவட்டம் புலியூர் அருகே பல்வேறு பகுதிகளின் கழிவுகள் வெங்கடாபுரம் பகுதிக்கு வருவதை கண்டித்து இந்த பகுதியினர் நேற்று சோறாக்கும் போராட்டம் நடத்தினர். கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட வெங்கடாபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியை சுற்றிலும் உள்ள சில பகுதிகளின் கழிவுகள் அனைத்தும் இந்த பகுதியில் வந்து தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.