வீரராக்கியம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து

கரூர், மே 6: கரூர் திருச்சி பைபாஸ் சாலை வீரராக்கியம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்து சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை 10 மணியளவில் கரூர் பகுதியில் இருந்து கார் ஒன்று திருச்சி நோக்கி திருச்சி பைபாஸ் சாலையில் சென்றது. இந்த கார், கரூர் திருச்சி பைபாஸ் சாலை வீரராக்கியம் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற அடையாளம் தெரியாத நபர் காயடைந்தார். விபத்து குறித்து இந்த பகுதியினர் ஆம்புலன்ஸ்க்கு அளித்த தகவலின் அடிப்படையில், விபத்தில் காயமடைந்தவர் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து காரணமாக கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வீரராக்கியம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: