காரைக்குடி, டிச.21: காரைக்குடி குருதிகொடையாளர்கள் அறக்கட்டளையின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் கார்த்தி வரவேற்றார். ஆலோசகர் முத்துக்குமார் தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் பிரகாஷ் மணிமாறன், ஆலோசகர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டு விழாவை முன்னிட்டு 25 முறைக்கு மேல் ரத்ததானம் வழங்கிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குருதிகொடையாளர்களுக்கு விருது வழங்குவது, ரத்ததான முகாம், குருதி வகை கண்டறியும் முகாம் என முப்பெரும் விழாவாக நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.