அந்தியூர். டிச.21: அந்தியூரில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, ‘‘நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசின் சார்பில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலே மின்வெட்டு இல்லாத மாநிலம் தமிழகம் என்ற பெயரை பெற்று உள்ளதால் இன்னும் 6 மாத காலத்தில் தமிழகத்தில் அமைய உள்ள புதிய தொழிற்சாலைகளால் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது’’ என்று கூறினார்.