விருதுநகர்,டிச.18: சம்பள நிலுவைத்தொகையை வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக ஊழியர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் ஜெயக்குமார், இளமாறன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.