சோனியாவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன்பே அவரது பெயர் 1980ல் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றதற்கு எதிராக விகாஸ் திரிபாதி டெல்லி கூடுதல் தலைமை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி வைபவ் சவுராசியா, வழக்கின் தீர்ப்பை நேற்று ஒத்திவைத்தார்.

Related Stories: