வேலூர்: பேரணாம்பட்டில் தந்தையிடம் தகராறு செய்த கூலித்ெதாழிலாளியை குத்திக்கொன்ற வாலிபர் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் ஒருவரது துக்க நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அலெக்ஸ்(26), சக்திவேல் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையறிந்த சக்திவேல் மகன் அப்பு(18), எதிரே வந்த அலெக்ைஸ தடுத்து நிறுத்தி ‘என் அப்பாவிடமே பிரச்னை செய்கிறாயா? எனக்கூறி தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில், படுகாயமடைந்த அலெக்சை அப்பகுதி மக்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.