சிவகாசி. டிச. 17: சிவகாசி அருகே ரிசர்வ்லயனில் அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் புதிய விழா மேடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு புதிய விழா மேடையை திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், கல்விச் செல்வம் அழியாச் செல்வம். கடைசிவரை வாழவைக்கும். கல்விக்காக தமிழக அரசு ஏராளமான நிதி உதவிகளை செய்து வருகிறது. அரசு நிதி உதவிகளை மாணவ, மாணவிகள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று பேசினார்.