ராசிபுரம் நகர பகுதியில் மறைந்த திமுக உறுப்பினர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி

ராசிபுரம், டிச.17: ராசிபுரம் நகர பகுதியில், மறைந்த திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். ராசிபுரம் நகர செயலாளர் சங்கர் முன்னிலையில், ராமசாமி,  சின்னாச்சி, கந்தசாமி, மாதேஸ்வரன், ஜெகதீசன், ராணியம்மாள், லட்சுமி, சாமாத்தம்மாள், நீலாவதி, கந்தசாமி ஆகிய 10 குடும்பத்தினருக்கு தலா ₹5 ஆயிரம் வீதம் ₹50 ஆயிரத்தை ராஜேஸ்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராம்குமார், நகர துணைச் செயலாளர்கள் ஆனந்த், ரவிச்சந்திரன், நகர பொருளாளர் செல்வம், நகர அவைத்தலைவர் அமிர்தலிங்கம், இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: