அணைக்கட்டு, டிச.17: அணைக்கட்டு அருகே பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், விவசாயி. இவர் தனது பூர்வீக சொத்துக்களை பட்டா மாற்றுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். இதுதொடர்பாக கந்தனேரியை சேர்ந்த இலவம்பாடி விஏஓ ரேவதி(37) என்பவரை அணுகினார். பட்டா மாற்றம் செய்ய ₹3 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என விஏஓ ரேவதி கேட்டதாக தெரிகிறது. முடிவில் ₹2,500 தர நடராஜன் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து நடராஜன் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் அறிவுறுத்தலின்பேரில் அவர்கள் கொடுத்த ரூபாய் நோட்டுகளை நடராஜனிடம் கொடுத்து ரேவதியிடம் கொடுக்கச்செய்தனர். அதன்படி நேற்று மதியம் 1 மணியளவில் நடராஜன், பணத்தை ரேவதியிடம் கொடுத்தார்.