திண்டுக்கல், டிச. 16: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் 19வது நாளாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரோக்கஸ் வளவன் தலைமை வகிக்க, நில உரிமை மீட்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரன் முன்னிலை வகித்தார்.