திருவாரூர், டிச.16: திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் முழுவதும் இருந்து வரும் கிராம சாலைகளை சீரமைத்து தர வேண்டும், குறிப்பாக திருப்பாம்புரத்திலிருந்து கோவில்பட்டி செல்லும் சாலை, மருதவாஞ்சேரியிலிருந்து ஒன்பதுபுளி செல்லும் சாலை ஆகிய சாலைகளை சீரமைக்க வேண்டும். அதம்பார் இ பி காலனியில் மழை காலங்களில் ஆற்றுநீர் குடியிருப்பு பகுதியில் புகுவதை தடுக்கும் வகையில் ஆற்றங்கரையில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும், எரவாஞ்சேரி கடை தெருவில் இருந்து வரும் பொது கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ஒன்றியம் முழுவதும் இருந்து வரும் தொகுப்பு வீடுகளை புதிதாக கட்டித்தர வேண்டும்.