செய்யாறு அருகே பரிதாபம் சுடுகஞ்சியில் விழுந்த குழந்தை பலி

செய்யாறு, டிச.16: செய்யாறு அருகே சுடுகஞ்சியில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக பலியானது. செய்யாறு அடுத்த இருமரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(30), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவுதமி. இவர்களது மகள்கள் தர்ஷினி(8), மந்தா(6), மகன் தஷ்வந்த்(2). இந்நிலையில், கடந்த 5ம் தேதி சுதாகரின் தாயார் கன்னியம்மாள் வீட்டில் சாதம் வடித்து வைத்திருந்தார். அப்போது, அங்கு வந்த குழந்தை தஷ்வந்த் எதிர்பாராதவிதமாக சாதம் வடித்த சுடுகஞ்சியில் தவறி விழுந்தான். இதில் படுகாயம் அடைந்த தஷ்வந்த்தை மீட்டு உடனடியாக செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை தஷ்வந்த் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்த புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: