பரமக்குடி, டிச.11: பரமக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக யுவராஜ் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர் ந்து நேற்று நீதிமன்றத்தில் பொறுப்பேற்று பணியினை தொடங்கினார். அவருக்கு மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.