பழைய கட்டணத்தை செலுத்த கீரனூர் மின்வாரியம் அறிவிப்பு

பழநி, டிச. 11: பழநி அருகே கீரனூர் பிரிவு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி,  மேல்கரைப்பட்டி, கொழுமம்கொண்டான், சங்கம்பாளையம், முருகவலசு, அத்திவலசு,  வட்டமலைதூர் மற்றும் கல்துறை ஆகிய பகிர்மானங்களில் சில நிர்வாக காரணங்களால்  மின் கணக்கீடு செய்யப்படவில்லை. இதனால், கடந்த செப்டம்பர் மாத மின்  கட்டணத்தையே செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்துக் கொள்ளுமாறு மின்வாரிய  செயற்பொறியாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Stories: