பட்டுக்கோட்டை, டிச. 10: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாளையொட்டி பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி ஓபிசி பிரிவு சார்பில் 75 வயதை கடந்த விவசாய தம்பதிகளுக்கு பாதபூஜை செய்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார். ஓபிசி பிரிவு சட்டமன்ற தொகுதி தலைவரும், கல்யாண ஓடை ஊராட்சி தலைவருமான மதிவாணன் வரவேற்றார். முதலில் 6 தம்பதிகளுக்கு மாலை அணிவித்து அவர்களது பாதங்களை தொட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் இளைஞர் மற்றும் மாணவர் காங்கிரசார் வணங்கினர்.