தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர் போக்சோவில் கைது

தண்டராம்பட்டு, டிச.9: தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய அவரது உறவினர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலையை சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரது பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரிடம் விசாரித்தனர். அதில், தண்டராம்பட்டு அடுத்த பி.குயிலம் கிராமத்தில் வசிக்கும் அவரது தாய் மாமனான கணேசன்(23) என்பவர், ஆசைவார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய், தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்தார். பின்னர், அவரை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை கிளை சிறையில் அடைத்தார்.

Related Stories: