ஊர்க்காவல் படையினருக்கு கொரோனா பரிசோதனை

திருப்பூர், டிச.9:திருப்பூர் கொரோனா தொற்று கடந்த காலங்களில் இருந்ததை விட தற்போது குறைந்து வருகிறது.  தொற்றுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மாநகர ஊர்காவல் படையில் பணியாற்ற புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கான பயிற்சி இன்று துவங்குகிறது. இந்நிலையில், பயிற்சி கலந்து கொள்பவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நேற்று ஊர்காவல் படை அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில், 77 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். மீதம் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே பயிற்சிக்கு அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: