ஆலங்குளம் தொழிலதிபர் இல்ல திருமண விழா

ஆலங்குளம், டிச. 8: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பட்டமுடையார்புரம் தொழிலதிபர் செல்வராஜ்- தமிழ்ச்செல்வி தம்பதியரின் மூத்த மகன் பிரபாகரனுக்கும் சங்கரன்கோவில் தொழிலதிபர் கனகவேல் - சுமதி தம்பதியரின் மகள் பிரபாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் சங்கரன்கோவில் கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை  ஆலங்குளம் மலை ராமர் கோயில் ஆர்ச் கீழ்ப்புறம் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோல்டன் அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பிரபல முன்னணி கேரள பாடகிகள் இடம்பெற்ற பிரைட் இன்னிசை கச்சேரியுடன் நடந்த இந்நிகழ்ச்சியில் கோல்டன் தங்கராஜா, மினிக்குட்டி பீடி அதிபர்கள் செல்லத்துரை நாடார், கனியம்மாள், செந்தில் முருகன், ஜெயவேலன் (எ) ரவி முத்துராஜா, இடைகால் ஸ்ட அக் சிபிஎஸ்சி பள்ளி நிறுவனர் முருகன், பள்ளி தாளாளர் புனிதா செல்வி, தெட்சணமாற நாடார் சங்க மாநிலத் தலைவர் ஆர்.கே.காளிதாஸ், தொழிலதிபர் டி.பி.வி. கருணாகர ராஜா, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணைத்தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம், அதிமுக தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.பி. பிரபாகரன், தென்காசி சாந்தி மருத்துவமனை நிறுவனர் டேவிட் செல்லத்துரை, கே.ஆர்.பி. இளங்கோ, நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.எம்.வி. மயிலேறி, செயலாளர் உதயராஜ்,அதிமுக பொதுக்குழு உறுப்பினர் எம்.பாண்டியராஜ், நகர திமுக செயலாளர் வக்கீல் எஸ்.பி.டி. நெல்சன் மற்றும் உறவினர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories: