பிராஞ்சிஸ் அவுட்லெட் துவங்க விண்ணப்பிக்கலாம்

நாமக்கல், ஆக. 7: நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தபால் அலுவலகங்கள் தொலைவாக உள்ள பகுதிகளில், அஞ்சல் சேவைகள் விரிவடைந்து, பொதுமக்கள் நன்மை அடைய, நிறுவனங்களிடம் இருந்து ‘பிராஞ்சிஸ் அவுட்லெட் துவங்க விரும்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த ‘பிராஞ்சிஸ் அவுட்லெட்’ மூலமாக தபால் அலுவலக சேவைகளான ‘ஸ்பீடு போஸ்ட், பதிவிதழ், பணப்பிரதிகள் மற்றும் பிற சேவைகள் வழங்கப்படும். தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சொந்தக் கட்டிட வசதி இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள், தேவையான ஆவணங்களுடன் ‘அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், நாமக்கல் அஞ்சல் கோட்டம், நாமக்கல் 637001’, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவங்களை அஞ்சல் கோட்ட அலுவலகத்திலோ அல்லது அஞ்சல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வரும், 14ம் தேதி கடைசிநாளாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: