கடலூர், டிச. 4: கடந்த மாதம் நிவர் புயல் தாக்கம் காரணமாக மாவட்டத்தில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு தரப்பட்ட விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்துமழை பெய்து வரும் நிலையில் அனைத்து நீர் நிலைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் தொடர்ந்து நீரை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெருமாள் ஏரியில், முழு கொள்ளளவான 6.5 அடி உயரத்திற்கு நீர் நிரம்பி உள்ளதால். தொடர்ந்து ஏரிக்கு வரும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெருமாள் ஏரி கரை பகுதியில் உள்ள ராணாகுப்பம், அரசுகுப்பம், ஆலப்பாக்கம், பள்ளி நீரோடை, கம்பளிமேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாய சாகுபடிகள் குறிப்பாக நெற்பயிர்கள், மணிலா, உள்ளிட்டவைகள் நீரில் மூழ்கியுள்ளன.